• June 6, 2025

Month: October 2024

செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து தவெகவின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைப்பெற்றது. இதில் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல், கொடியின் நிறம், தவெகவின் நிலைப்பாடு, கோட்பாடுகள், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அரசியல்வாதியாக அனல்பறக்க நேற்று விஜய் உரையாற்றி […]

செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தியது. இதில் பங்கேற்க 20 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 7 ஆயிரத்து 247 மையங்களில் 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதனிடையே, பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில், கூடுதலாக 480 பணியிடங்கள் […]

செய்திகள்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமனம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் உள்ளார். தேசிய அகாடமியின் தலைமை ஆலோசகராக வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளார். இந்திய அணி நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான டி20 இந்திய அணி சூர்யகுமார் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணிக்கு தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏனென்றால், இந்திய டி20 கிரிக்கெட் அணி தென்ஆப்பரிக்காவில் நவம்பர் 8, 10, […]

செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் இந்திய வீரர் சிராக் சிக்காரா

உலக மல்யுத்த 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்திய வீரர் சிராக் சிக்காரா தங்கம் வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீரர் சிராக் சிக்காரா என்ற பெருமையை பெற்றார். இந்திய மல்யுத்த குழு U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2024-ல் ஒரு தங்கம், வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் ஒன்பது பதக்கங்களுடன் முடித்துள்ளது. U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபர் 21 முதல் 27 வரை […]

செய்திகள்

ஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு கூடுதல் தலைமை செயலாளர் (போக்குவரத்து துறை) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் கடந்த ஏப்ரல் 2022 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3414 பயனாளிகளுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு […]

செய்திகள்

புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்தினம் விடுமுறை

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி புதன்கிழமை புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பொது பணி […]

சினிமா

படப்பிடிப்பில் பெயரை சொல்லி அழைத்த சிறுவனுடன் சைகையில் பேசிய நயன்தாரா   

ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார்.  தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர், ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது, யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாரா, சிறிய வயது […]

செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கரும்பு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று சட்டமன்ற பொது தேர்தலின் போது வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்து 41 மாதங்கள் கடந்த நிலையில், 2023-24ம் ஆண்டில் கரும்பு சப்ளை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் […]

சினிமா

ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்

70 மற்றும் 80களில் இந்தியத் திரைப்படங்கள் பெரிய அளவில் வளர்ந்ததால் நடிகர்களின் சம்பளமும் உயர்ந்தது. அதன்படி, அப்போது உச்ச நடிகராக இருந்த அமிதாப்பச்சன் தனது சம்பளத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தினார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அமிதாப் இருந்தார். >ஆனால், இது 90-களில் முறியடிக்கப்பட்டது. அதை உடைத்தது ஒரு தென்னிந்திய நடிகர். அவர்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘ஆபத்பாந்தவுடு’ படத்திற்காக ரூ.1.25 […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தி நகரும் படிக்கட்டுகள் அமைக்ககோரி மதிமுக ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி ஒன்றிய மதிமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று காலை இனாம்மணியாச்சி பைபாஸ், கும்கோணம் டிகிரி காபி அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்: விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார்., நகர செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள்  .ராஜ்குமார் .ராஜசேகர் காளிராஜ் காளிசாமி, மணிராஜ்.சிவபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-• விவசாயத்தை அழிக்கும் காட்டுப்பன்றிகளை […]