தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இதனை தொடர்ந்து தவெகவின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைப்பெற்றது. இதில் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல், கொடியின் நிறம், தவெகவின் நிலைப்பாடு, கோட்பாடுகள், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அரசியல்வாதியாக அனல்பறக்க நேற்று விஜய் உரையாற்றி இருந்தார். இவரது இந்த பேச்சு குறித்து பல அரசியல் தலைவர்களும், நடிகர்களும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜய் குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “துறவிகளும், சித்தர்களும் அதிகம் வாழ்ந்த தமிழ்நாட்டில் அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கும் விஜய்க்கு மனதார வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.
