கோவில்பட்டி அருகே கோழி பண்ணையில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
![கோவில்பட்டி அருகே கோழி பண்ணையில் பட்டாசு தயாரித்த 4 பேர் கைது](https://tn96news.com/wp-content/uploads/2024/10/InShot_20241028_153658825.jpg)
கோவில்பட்டி அருகே எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் அந்தோணி திலிப் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது எப்போதும்வென்றான் அருங்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (வயது 27) என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையை சோதனை செய்தனர்.
அங்கு ஏழாயிரம்பண்ணை சங்கரபணியாபுரம் பகுதியைச் சேர்ந்த \கருப்பசாமி (38), சதீஷ்குமார் (27) தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த பிரதீப்குமார் (29) ஆகியோர் அரசு அனுமதி மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமமன்றி சட்டவிரோதமாக வெடிமருந்து பொருட்களை வாங்கி விற்பனைக்காக பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் கார்த்திக், கருப்பசாமி, சதீஷ்குமார், பிரதீப்குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து பட்டாசுகள் தயாரிக்க தேவைப்படும் சோடியம், சல்பர், அலுமினிய தூள் உட்பட வெடிமருந்து பொருட்களையும், பட்டாசு பொருட்களை சட்ட விரோத விற்பனைக்காக பயன்படுத்திய ஒரு மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)