18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். இன்று 2-வது நாளாக பதவி பிரமாணம் நடைபெற்றது. தமிழக எம்.பி.க்கள் வரிசையாக இன்று மதியம் பதவி ஏற்றுக் கொண்டனர். திமுக எம்.பிக்கள் பலரும் இன்று மக்களவையில் பதவியேற்றபோது, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது பெயர்களை குறிப்பிட்டதோடு, வாழ்க உதயநிதி என்றும் […]
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை கோவில் குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்தார். தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரிக்குள் நிரப்பப்படும்; சட்டசபையில்
தமிழக சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:- திமுக அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு […]
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் சஹாசங்கா மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம் நடைபெற்றது. இம் முகாமில் 96 பேர் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த 72 பேர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முதன்மைமேலாளர் மதுரைஅழகர் தலைமை தாங்கினார். புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி , ஊராட்சி செயலாளர் சின்ன கருப்பசாமி ஆகியோர் முன்னிலை […]
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறப்பிலேயே குடல் அடைப்பு பிரச்சினை உள்ள 4 குழந்தைகள் சீக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தினர். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல் அடைப்பு நீக்கம் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி அக்குழந்தைகளுக்கு இன்று ஒரே நாளில் குடல் அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உள்ளது. தற்போது அந்த குழந்தைகள் நலமுடன் உள்ளனர். மருத்துவமனை தலைமை டாக்டர் எஸ்.வெங்கட சரவணன் மற்றும் உதவி பேராசிரியர் […]
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- தமிழ்நாடு ஆளுநர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் கேட்டு வருகின்றனர். அதாவது,”குலதெய்வவழிபாட்டைதடை செய்ய வேண்டும்!” தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்! ஆளுநர் ரவி என சில ஊடகங்கள் வாயிலாக […]
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் சிறப்பு செயல்பாட்டு நேரம் நாளை (26.6.2024 ம் தேதி) முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆதார் விவரங்களானது (Document Update) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்கபட வேண்டும் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் கடந்த கடந்த 2015-ம் ஆண்டு மனைவி முருகாத்தாளை கொலை செய்த வழக்கில் பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் அறிவுறுத்தலின் படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசு , நீதிமன்ற […]
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதல் அமைச்சர் நேரில் சந்திக்காதது ஏன்? டி. ஜெயக்குமார்
கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் […]
கோவில்பட்டியில் தொடர் போராட்டங்கள்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஒய். எம். சி. ஏ. தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில் நடைபெற்றது. கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின் முன்னிலை வகித்தார். கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த ஆலோசனையை முன்வைத்து தலைவர் தமிழரசன் உரையாற்றினார். கூட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி ரவிகுமார், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அபிராமி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், பகத்சிங் […]