• June 7, 2025

மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

 மனைவியை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா நெய்க்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 55). இவர் கடந்த கடந்த 2015-ம் ஆண்டு மனைவி முருகாத்தாளை கொலை  செய்த வழக்கில் பழனி தாலுகா காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல்  விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்  அறிவுறுத்தலின் படி பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் தென்னரசு , நீதிமன்ற தலைமை காவலர் பாலசுந்தரம் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று  24.6.2024-ம் தேதி விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அவர், சின்னகண்ணுவுக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 5 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *