• June 7, 2025

தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை நேரம் அதிகரிப்பு

 தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை நேரம் அதிகரிப்பு

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை மையத்தின் சிறப்பு செயல்பாட்டு நேரம் நாளை (26.6.2024 ம் தேதி) முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்தப்படுவதாக கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்  செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆதார் விவரங்களானது (Document Update) 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்கபட வேண்டும் “உங்கள் ஆதார் முன்பு தயாரிக்கப்பட்டு இன்னும் புதுப்பிக்கபடவில்லையா” ? இந்த தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மட்டும் திருத்த சேவை மையத்தின் சிறப்பு செயல்பாட்டு நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அமல்படுத்தப்படுகிறது. 

பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செ.சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *