தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 4 குழந்தைகளுக்கு குடல் அடைப்பு நீக்க அறுவை சிகிச்சை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறப்பிலேயே குடல் அடைப்பு பிரச்சினை உள்ள 4 குழந்தைகள் சீக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தினர்.
அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல் அடைப்பு நீக்கம் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி அக்குழந்தைகளுக்கு இன்று ஒரே நாளில் குடல் அடைப்பு அறுவை சிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து உள்ளது. தற்போது அந்த குழந்தைகள் நலமுடன் உள்ளனர்.
மருத்துவமனை தலைமை டாக்டர் எஸ்.வெங்கட சரவணன் மற்றும் உதவி பேராசிரியர் டி.முத்துக்குமரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.
குடல் அடைப்புகளுக்கு காரணம் பிறவி கோளாறு என்றும், இதை சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தை இறந்து போக நேரிடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். பேட்டியின்போது, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.
