மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைத்தல் முகாம்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், புளியங்குளம் ஊராட்சியில் சஹாசங்கா மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களை சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தல் முகாம் நடைபெற்றது.
இம் முகாமில் 96 பேர் கலந்து கொண்டனர். தகுதி வாய்ந்த 72 பேர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முதன்மைமேலாளர் மதுரைஅழகர் தலைமை தாங்கினார். புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி , ஊராட்சி செயலாளர் சின்ன கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
தமிழ் நாடு கிராம வங்கி மேலாளர் மனோ ரஞ்சித் , காசாளர் செல்வராஜ் வங்கி நடைமுறைகள், சேமிப்பு மற்றும் காப்பீடு பற்றி சிறப்புரையாற்றினர்.
வங்கி உதவியாளர் ,வங்கி வணிக தொடர்பாளர் கோகிலா காப்பீடு பதிவு செய்து அனைவரையும் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கள ஒருங்கிணைப்பாளர் கனகவள்ளி, பயிற்றுநர் கஸ்தூரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்றுநர் முருகலக்சுமி நன்றி கூறினார்
