• June 7, 2025

Month: June 2024

தூத்துக்குடி

கனிமொழி எம்.பி. தூத்துக்குடி வருகை; இன்று மாலை, பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்க செய்து வெற்றி பெற்றார். இதனையடுத்து திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்பி தன்னை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் […]

கோவில்பட்டி

பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன் குமார் வெங்கடேசன், பொன் மாடசாமி, இவர்கள் இருவரும் நேற்று மதியம் பைக்கில் எட்டயபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்,கொளுத்தும் வெயிலில் அவர்கள் வந்ததால் முத்துலாபுரம் பாலம் அருகே சாலையில் பைக்கை நிறுத்தி அந்த பகுதியில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க முற்பட்டனர்,.அந்த சமயத்தில் தினடுக்கல்லில் இருந்து தூத்துக்குடிகுய் வேகாமாக சென்ற கார், பைக் மீதுபயங்கரமாக மோதியது. இதில் தூக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்,இந்த […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஜமாபந்தியில் மனு கொடுத்து ஒரு ஆண்டாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை; த.மா.கா.குற்றச்சாட்டு  

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா தலைவர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகராட்சி வார்டு எண் 23, 24 உட்பட்ட கடலையூர் சாலை, வள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு முறையாக தீர்வை செலுத்தி வருகின்றனர். இந்த வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் மற்ற துறைகள் அனுமதி அளித்துள்ள நிலையில், வருவாய்த்துறை மட்டும் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஏ.டி.எம்.இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் சிக்கினார்

கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டி.பி.எஸ். வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த சனிக்கிழமை (8.6.2024) அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து இரும்பு கம்பியால்  ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்தார். அப்போது  திடீரென அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர், யாராவது வந்தால் மாட்டிகொள்வோம் என்ற பயத்தில்  தனது முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி […]

செய்திகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தானின், திமுக  மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு  

தமிழக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக இருப்பவர்  செஞ்சி மஸ்தான். இவர்  விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக  செயலாளராகவும் பணியாற்றி வந்தார். விழுப்புரம் திமுகவில் அமைச்சர் பொன்முடி தரப்புக்கும், செஞ்சி மஸ்தான் தரப்புக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தன. பொது மேடையில்  செஞ்சி மஸ்தான் மீது பொன்முடி கோபத்தை காட்டிய வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் , விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுகவிலும், துறை ரீதியிலான நிர்வாக விஷயங்களிலும் […]

கோவில்பட்டி

அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற  மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

கோவில்பட்டி ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சிகுழு சார்பில், அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதுக்கிராமம் ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. 10 மற்றும்12 ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய்1000 வீதம் 31 மாணவர்களுக்கும்,முதலிடம் பெற்றவருக்கு ரூ 5000 மற்றும் நினைவு பரிசும்,2ம் இடம்பெற்றவருக்கு ரூ 3000 மற்றும் நினைவு பரிசும்,3ம் இடம் பெற்றவருக்கு ரூ 2000 மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கொலை, கொள்ளை சம்பவங்கள்: கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அழைப்பு

கோவில்பட்டியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை , கொள்ளை சம்பவங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்படுகிறது. வருகிற  14ந்தேதி  வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கபட இருப்பதாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின்  பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் தெரிவித்து உள்ளனர், மேலும்  அன்றைய தினம் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் […]

கோவில்பட்டி

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தி

ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள்  குறித்த தணிக்கை முறை, ஜமாபந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட  வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தியை நடத்தி வருகிறார், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  இன்று (11.6.2024) படர்ந்தபுளி உள்வட்டத்திற்குட்பட்ட படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், […]

செய்திகள்

ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 தேர்வு; கோவை மாணவர்கள் 4 பேர் சாதனை

.சென்னை ஐஐடி – என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஜே.இ.இ அட்வான்ஸ்டு 2024 என்ற நுழைவு தேர்வை சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் கடந்த மே மாதம் 26″ம் தேதி நடத்தியது.உலக அளவில் கடினமான தேர்வாக கருதப்படுகின்ற இந்த தேர்வை எழுத இந்தியா முழுவதிலும் இருந்து 1,80,200 பேர் விண்ணப்பித்து தேர்வை எதிர் கொண்டனர்.இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இத்தேர்வில் இந்தியா முழுவதிலும் 48,248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வுக்காக கோவை ஆர்.எஸ்.புரம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வேல்ஸ் ஆக்கி அகாடமிக்கு 16 ம் தேதி வீராங்கனைகள் தேர்வு

கோவில்பட்டியில் வேல்ஸ் ஆக்கி அகாடமிக்கு 13 வயதுக்குட்பட்ட பெண்கள் இளம் ஆக்கி வீராங்கனைகள்  தேர்வு வருகிற 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவில்பட்டி SDAT செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ள வேண்டும் மேலும் 1.1.2012 க்கு பின் பிறந்திருப்பவராகவும் தேர்வில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் வேல்ஸ் அகாடமியின் விடுதியில் தங்கி பயிற்சி பெற தயாராகவும் […]