கோவில்பட்டியில் கொலை, கொள்ளை சம்பவங்கள்: கோட்டாட்சியரிடம் மனு அளிக்க அழைப்பு

கோவில்பட்டியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை , கொள்ளை சம்பவங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்படுகிறது.
வருகிற 14ந்தேதி வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கபட இருப்பதாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் பொருளாளர் சுபேதார் கருப்பசாமி ஆகியோர் தெரிவித்து உள்ளனர்,
மேலும் அன்றைய தினம் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
