• June 8, 2025

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தி

 எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தி

ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள்  குறித்த தணிக்கை முறை, ஜமாபந்தி என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட  வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வார்கள். தற்போது தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது, மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஜமாபந்தியை நடத்தி வருகிறார்,

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  இன்று (11.6.2024) படர்ந்தபுளி உள்வட்டத்திற்குட்பட்ட படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், ராமனூத்து, தலைக்காட்டுபுரம் மற்றும் சிங்கிலிபட்டி ஆகிய கிராமங்களுக்காளான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திரு.கோ. லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து ஆட்சியர் லட்சுமிபதி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *