அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு


கோவில்பட்டி ஸ்ரீ நாராயணகுரு கல்வி வளர்ச்சிகுழு சார்பில், அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா புதுக்கிராமம் ஆவுடையம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது.
10 மற்றும்12 ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபாய்1000 வீதம் 31 மாணவர்களுக்கும்,முதலிடம் பெற்றவருக்கு ரூ 5000 மற்றும் நினைவு பரிசும்,2ம் இடம்பெற்றவருக்கு ரூ 3000 மற்றும் நினைவு பரிசும்,3ம் இடம் பெற்றவருக்கு ரூ 2000 மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். என்ஜினியர் மாரிக்கண்ணன், முன்னாள் சுகாதார ஆய்வாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் ஜான்கணேஷ் ,பாரதி அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், தமிழாசிரியர்கள் முருகசரஸ்வதி, சசிகலா ஆகியோர் சிறப்பிடம் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர்.
ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், ஆறுமுகம்,தினேஷ் பாலாஜி,அருள் ஜெயராஜ் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் ஜோதிடர் அருணாசலம் = வரவேற்றார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
