• June 8, 2025

பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

 பைக் மீது கார் மோதி 2 பேர் பலி

கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன் குமார் வெங்கடேசன், பொன் மாடசாமி, இவர்கள் இருவரும் நேற்று மதியம் பைக்கில் எட்டயபுரம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர்,
கொளுத்தும் வெயிலில் அவர்கள் வந்ததால் முத்துலாபுரம் பாலம் அருகே சாலையில் பைக்கை நிறுத்தி அந்த பகுதியில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்க முற்பட்டனர்,.
அந்த சமயத்தில் தினடுக்கல்லில் இருந்து தூத்துக்குடிகுய் வேகாமாக சென்ற கார், பைக் மீதுபயங்கரமாக மோதியது. இதில் தூக்கி இருவரும் தூக்கி வீசப்பட்டனர்,
இந்த விபத்தில் குமார் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட பொன் மாடசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *