• June 8, 2025

Month: June 2024

கோவில்பட்டி

அமைச்சர் கீதா ஜீவனுடன் கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்திப்பு

மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது  ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனையானது 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது.  எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில .அரசுகளுக்கு தீப்பெட்டி […]

கோவில்பட்டி

இலவச மருத்துவ முகாம்

கோவில்பட்டியில் எ.கே.மாறன் டிரஸ்ட் மற்றும் கார்த்திக் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பிரபல அறுவைசிகிச்சை, லேபராஸ்கோபிக் நிபுணருமான டாக்டர் நரேன் கார்த்திக் கலந்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டார்.  முகாமில் பங்கேற்ற அனைவருக்கும்  இலவச மருத்துவ ஆலோசனை, ரத்தபரிசோதனைகள், செய்யப்பட்டு, மருந்துகளும் வழங்கப்பட்டன.முகாமில்  டாக்டர்கள் செல்லம்மாள், மாறன்,ரக்ஷா கார்த்திகா, மோகனப்பிரியா ஆகியோர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் கோவில்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள் 300க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு  பயனடைந்தனர்.

கோவில்பட்டி

ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்   

கோவில்பட்டி வட்டார ராகவேந்திரா சேவாஅறக்கட்டளை சார்பில் 34 வது மாத அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி வேலாயுதபுரம்  அன்னை ஸ்பத்திரகாளி அம்மன்,காளியம்மன்  கோவில் முன்பு நடைபெற்றது .. நிகழ்ச்சிக்கு  கூட்டுறவு  வங்கி நகர முன்னாள் தலைவர்  லவ ராஜா வரவேற்றார் . லட்சுமி  நாட்டு மருந்து கடை   அதிபர் பெரியசாமி,கோவில்பட்டி  கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.  வேலாயுதபுரம் நாடார் உறவின்  முறை சங்கத் தலைவர்   வேல் முருகேசன்  தலைமை […]

செய்திகள்

திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

 திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சி லட்சுமணன்பட்டி நால்ரோட்டில் இருந்து அய்யம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் கண்டெய்னர் லாரி ஒன்று வியாழக்கிழமை இரவு நின்று கொண்டிருந்தது. அவ்வழியாக சென்ற இளைஞர்கள் எதற்காக லாரி இங்கே நிற்கிறது என்று கேட்டுள்ளனர்.  அதற்கு கிளீனர் வழி மாறி வந்து விட்டோம் திருப்புவதற்காக இங்கே நிறுத்தி உள்ளோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் இளைஞர்கள் வந்து பார்த்த போது மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் ரத்த கரையுடன் […]

செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு; எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

 விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜூலை 10 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வேட்பாளராக திமுக சார்பில் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் சித்த மருத்துவர் அபிநயா களம் காணுவார் என்று அறிவிக்கப்பட்டது.  பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  […]

செய்திகள்

மலைக்கோவிலில் வருடாபிஷேக விழா 

திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகில் உள்ள மேலப்பாட்டம் மலைமீது அமைந்துள்ள பூர்ணபுஷ்கல சமேத ஶ்ரீஆயிரங்காவய்யன் கோவிலில் இரண்டாவது வருஷாபிஷேகம்  விழா இன்று நடந்தது.  கோவில்   கோபுரத்திற்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் ஹோமம் அபிஷேகம் மற்றும் அலங்காரம், தீபாராதனை நடந்தது.  மதியம் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

68 கிராம ஊராட்சிகளில் சமூகதணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 68 கிராம ஊராட்சிகளில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை கிராம ஊராட்சி வள பயிற்றுநர்களால் சமூக தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூக தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.கயத்தார் ஊராட்சி ஒன்றியம் வடக்கு இலந்தைகுளம் கிராம ஊராட்சியில் நடந்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார்.பஞ்சாயத்து தலைவர் கணபதி,உதவி பொறியாளர் […]

செய்திகள்

காதல்ஜோடிக்கு திருமணம்: கம்யூனிஸ்டு அலுவலகத்தை சூறையாடிய சம்பவத்தில்  13 பேர்  கைது

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (வயது 28), பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி ( 23) இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில்  லெனின் சிலை முன்பு போலீஸ் […]

செய்திகள்

குவைத் தீவிபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி ;

குவைத் நாட்டின் மங்காப் நகரில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12ம் தேதி ஏற்பட்ட  தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில், 24 பேர் கேரளாவையும், 7 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள். பலியான கேரளா மற்றும் தமிழகத்தை செர்ந்த்தவர்கள் உடல்கள் தனி விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன, தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேபோல், […]

கோவில்பட்டி

பக்ரித் பண்டிகை: எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சந்தை கூடும். சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக அளவில் வருவது வழக்கம், சாதாரண நாட்களில் இங்கு ரூ.1 கோடிக்கும், பண்டிகை காலங்களில் 3 முதல் ரூ. 8 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை நடக்கும்.திங்கட்கிழமை(17-ந்தேதி) பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இன்று எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும் என்று கருதப்பட்டது. நேற்று மாலையே ஆடுகள் […]