• June 8, 2025

பக்ரித் பண்டிகை: எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

 பக்ரித் பண்டிகை: எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

கோப்புப்படம்

கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த சந்தை கூடும்.

சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்குவதற்கும் விற்பதற்கும் அதிக அளவில் வருவது வழக்கம்,

சாதாரண நாட்களில் இங்கு ரூ.1 கோடிக்கும், பண்டிகை காலங்களில் 3 முதல் ரூ. 8 கோடி வரையிலும் ஆடுகள் விற்பனை நடக்கும்.திங்கட்கிழமை(17-ந்தேதி) பக்ரித் பண்டிகையை முன்னிட்டு இன்று எட்டயபுரம் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருக்கும் என்று கருதப்பட்டது.

நேற்று மாலையே ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை தொடங்கியது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்தன.

ஆனால் எதிர்பார்த்த அளவு ஆடுகள் விற்பனை ஆகவில்லை. விலை அதிகமாக சொல்லப்பட்டது. ரூ.4 கோடிக்கு மட்டுமே ஆடுகள் விற்பனை ஆனது. கடந்த ஆண்டு பக்ரித் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.

இந்த ஆண்டு விற்பனை குறைவு பற்றி வியாபாரிகள் கூறுகையில், “முந்திய வாரங்களில் நிறைய பேர் ஆடுகளை வாங்கி சென்று விட்டனர்”, என்று தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *