தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஒன்றியம் குரும்பூர் அருகே அங்கமங்களம் சமுதாய நலக்கூடத்தில் தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி வரவேற்றார். சமூக ஆர்வலர் அங்கமங்கலம் என். பாலமுருகன், காயல். ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் […]
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வரும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது.பழைய […]
கோவில்பட்டி கரிசல் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மூன்றாம் ஆண்டுநினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது இதையொட்டி கோவில்பட்டியில் கி ராஜநாராயணன் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் ராஜகோபால் வழக்கறிஞர் கருப்பசாமி ,வசந்த் அரவிந்தன் மற்றும் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பங்கேற்றனர்.
கன மழையின்போது பொதுமக்கள் கடைப்பிடிக்ககூடிய பாதுகாப்பு நடைமுறைகள்; தூத்துக்குடி ஆட்சியர் விளக்கம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கோடை மழை தீவிரமாக பெய்து வருவதையடுத்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ‘ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னச்சரிக்கையுடன் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் காற்று, மழை மற்றும் இடி, மின்னலின்போது மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் […]
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் கோடை விழாவை யொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் 61வது மலர்கண்காட்சி இன்று காலை தொடங்கியது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர்- ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியை யொட்டி சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ […]
கோவில்பட்டி ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கோடை கால கபடி பயிற்சி முகாம் கடந்த 1 ந் தேதி முதல் 15 ந் தேதி வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் 50 வீராங்கனைகள் , 50 வீரர்கள் என தமிழகம் முழுவதும் 100 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின் நிறைவு விழா முத்து நகர் தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார். ஸ்டேட் வங்கியின் ஓய்வு பெற்ற […]
சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி., உணவு பாதுகாப்பு ஆணையர் (பொ) ஹரிஹரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் உத்திரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து அடங்கிய குழுவினர் தூத்துக்குடி மாநகராட்சியில் எட்டயபுரம் சாலையில் உள்ள அசைவ ஓட்டலான ஹனிபா பிரியாணி கடையில் இன்று (15.5.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, நேற்று சமைத்து, விற்பனையாகாமல் […]
கோவில்பட்டி தனியார் மருத்துவமனைகளில் ஜேசிஐ சார்பில் உலக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் கோமதி,கமலா மாரியம்மாள், பத்மாவதி,சஞ்சய் சிவநாராயணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் ஜேசிஐ நிர்வாகிகள் ஜென்சி, தினேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி இந்து அலுவலகம் மற்றும் தேசிய பத்திரிகை ஊழியர்கள் சங்கத்தின் தலைவராக தொடர்ந்து 3-வது முறையாக திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம் பி. போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதை யொட்டி கனிமொழியை , அச்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவில்பட்டியில் 14 பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு ; தகுதி சான்றிதழ் பெற்றவுடன்
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்கைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நடந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழியப் பாண்டியன், வட்டாட்சியர் சரவண பெருமாள், பள்ளி கல்வி துறை துணை ஆய்வாளர் என்.கே.ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.சுரேஷ் விஸ்வநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், 216 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 14 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 202 வாகனங்கள் […]