• June 7, 2025

Month: May 2024

கோவில்பட்டி

10 ம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு

 கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ. வே. அ வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி  10ம் வகுப்பு அரசு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்  முதல் மதிப்பெண் 474, இரண்டாம் மதிப்பெண் 471, மூன்றாம் மதிப்பெண் 462 மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 2 மாணவர்கள் கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். இதையொட்டி பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்   டி. எம்.துரை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு  […]

கோவில்பட்டி

10ம் வகுப்பு தேர்வில் சாதனைபடைத்த கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 312 பேர் தேர்வு எழுதியதில் 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் மாணவி நிவாஷனி 491 மதிப்பெண், விஜயலட்சுமி 488 மதிப்பெண்,ரேணுகா 485 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  3 மாணவிகள் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 450 மதிப்பெண்களுக்கு மேல் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 94.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  மேலும், மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வை 21 ஆயிரத்து 843 மாணவா்- மாணவிகள் எழுதினர். தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 20 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.39% ஆகும்.  வழக்கம்போல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெயிண்டர் குத்திக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் முத்துப்பாண்டி (வயது 42). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துப்பாண்டி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். மேலும், பணம் கொடுக்கல் வாங்கல்  தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.   நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில், உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தார்.அப்போது வீரபாண்டி நகரை சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (27) என்பவர் வீட்டிற்கு வந்தார். இருவரும் சேர்ந்து மது குடித்தார்களாம். […]

கோவில்பட்டி

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கம்ம நாயுடு மகாஜன

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அந்த சமுதாய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாடங்களில்  100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் என்ஜினியரிங் கட் ஆப் 200/200 பெற்று. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் ஏ.சஞ்சய் 587 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்து சாதனை […]

செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை  வெடிவிபத்தில் 8 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம் போல் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு அறையில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க வழி இன்றி 5 பெண்கள் உட்பட 8 பேர் கருகி உயிர் இழந்தனர்.  மேலும் சிலர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.  அவர்களை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கூட்டம்

தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் செயலாளர்,தென் இந்தியா தீப் பெட்டி உட்பத்தியாளர் கள் சங்கம் தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தீப்பெட்டி ஆலை மற்றும் ஆலையை சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தீயணைப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் […]

கோவில்பட்டி

சுகாதாரக் குறைபாடு: கழுகுமலை ஐஸ் நிறுவனத்துக்கு ‘சீல்’

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் டாக்டர் ச. மாரியப்பனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் புகாா் வந்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், கயத்தாறு ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் (பொ) ஜோதிபாசு, சம்பந்தப்பட்ட ஐஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தி அறிக்கை அளித்தாா். அதன்பேரில், அந்த ஐஸ் நிறுவனத்துக்கு எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்தும் தொடா்ந்து சுகாதார குறைபாடுடன செல்படுவது தெரியவந்தது. இதையடுத்து நியமன அலுவலா் உத்தரவின்படி, காவல் துறை பாதுகாப்புடன் அந்நிறுவனம் மூடி சீலிடப்பட்டது. அதன் உரிமையாளா் […]

ஆன்மிகம்

நாளை ‘அட்சய திருதியை’-என்ன வாங்கலாம்?

ஒவ்வொரு நாளுக்குமே ஒரு தனி சிறப்பு உண்டு. அந்த வகையில் ஒரு சிறப்பான நாள் தான் அட்சய திருதியை. ‘அட்சயம்” என்றால் வளர்வது மற்றும் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். அந்த நாளில் நீங்கள் எது வாங்கினாலும் மென்மேலும் வளரும், தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நமக்கு நன்மையை கொடுக்கும். சித்திரை மாதம் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியை திதியை நாம் […]

கோவில்பட்டி

நாகலாபுரம் பள்ளியில் இலவச ஆங்கில பேச்சு மற்றும் யோகா பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலூகா, கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 7 நாட்கள் இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் யோகா பயிற்சி தனித்தனியாக நடந்தது.  பயிற்சியாளர்களாக முதுகலை ஆங்கில ஆசிரியர் ஜான் ஸ்டேனி, அரசியல் அறிவியல் முதுகலை ஆசிரியர் குணசேகரன், மற்றும் இடைநிலை ஆசிரியர்கள்  கவிதா, ரமேஷ்,உடற்கல்வி ஆசிரியை நர்மதா ஆகியோர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான அடிப்படை பயிற்சி மற்றும் யோகா […]