• May 21, 2024

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தினர் பாராட்டு

 பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தினர் பாராட்டு

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவில்பட்டி மண்டலத்தின் சார்பாக கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அந்த சமுதாய மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய 4 பாடங்களில்  100க்கு 100 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் என்ஜினியரிங் கட் ஆப் 200/200 பெற்று. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் ஏ.சஞ்சய் 587 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் எந்த ஒரு கோச்சிங் இல்லாமல் இவர் JEE பொது தேர்வில் ல் 95 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் கே.சரவண ரிஷி 587 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். இந்த மாணவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் – கோவில்பட்டி மண்டல உப தலைவர் எஸ். எம். ஆர்.ராமச்சந்திரன் , செயலாளர் கற்பூரராஜ் , மாநில பொதுக்குழு உறுப்பினா் டி.வெங்கடேஷ் , மண்டல செயற்குழு உறுப்பினர் முனியசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி பொன்னாடை அணிவித்து மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *