சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 8 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம் போல் வேலை நடந்து கொண்டிருந்தது.
ஒரு அறையில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின
இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க வழி இன்றி 5 பெண்கள் உட்பட 8 பேர் கருகி உயிர் இழந்தனர். மேலும் சிலர் படுகாயத்துடன் அலறி துடித்தனர்.
அவர்களை மற்ற தொழிலாளர்கள் மீட்டுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெடிவிபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பலியான 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.