கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கூட்டம்
தீப்பெட்டி தொழில் பாதுகாப்பு குழு கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் செயலாளர்,தென் இந்தியா தீப் பெட்டி உட்பத்தியாளர் கள் சங்கம் தலைவர், பொருளாளர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தீப்பெட்டி ஆலை மற்றும் ஆலையை சுற்றி உள்ள இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தீயணைப்பு சாதனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் அதைப் பயன்படுத்துவதற்கு தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மருந்து குச்சிகளை இருப்பு வைப்பது கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது