கோவில்பட்டி மில் தெரு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கும் சவுந்தர் என்பவருக்கும் இடையே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது,’ . இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவினர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாக கூறி லெட்சுமி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு முன்பு இன்று காலை ததிடீரென தர்ணா போராட்டத்தில் […]
தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமான பத்திரத்தில் சொத்து விவரங்களை தெரிவித்து உள்ளார். தனக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 16 ஆயிரத்து 290 மதிப்பிலான 3 கார்கள் வைத்து இருப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும் 704 கிராம் தங்கம், 13.03 காரட் வைரம், இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அந்த நகைகளின் மதிப்பு ரூ,.55 லட்சத்து 37 ஆயிரத்து 555 ஆகும்.
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியாகி உள்ளது, அசையும் சொத்து ரூ.36 லட்சம், அசையா சொத்து ரூ.1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை மனைவி அகிலா பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் அசையா சொத்தும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது,
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்தநிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 3.06 கோடி ஆண்களும், 3.17 கோடி பெண்களும், 8,465 பேர் மூன்றாம் பாலினத்தவரும் […]
அ.தி.மு.க. கொடி, சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நீண்ட நாட்களாக வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி, லெட்டர்பேடு ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கடந்த 18-ந்தேதி தீர்ப்பளித்ததுஇதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் […]
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார், அவர் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆதரவாளர்கள் புடை சூழ சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார். தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதியிடம் விஜயசீலன், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், அப்போது வடக்கு மாவட்ட தமாக தலைவர் கே.பி.ராஜகோபால் உடனிருந்தார். முன்னதாக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள […]
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில்.பங்குனி பெருந்திருவிழா ஏப்ரல் 5 -ந் தேதி தொடங்கி 15-ந்த்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி அலங்காரம் வீதி உலா நடக்கிறது. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 13 அன்று தேர் திருவிழா நடக்கிறது, 14-ந் தேதி தீர்த்தவாரி ,15 -ந் தேதி தெப்பத்திருவிழா, அம்மன் பவனி நடக்கிறது. பங்குனி […]
கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்துள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் சொர்ணமலை கதிரேசன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல் தான் மூலவராக காட்சி அளிக்கிறார். தினசரி பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில்முருப்பெருமான் போல் சந்தனத்தில் வேலுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.இந்த நாட்கள் மிகவும் சிறப்பபானதாக இருக்கும். பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் […]
கோவில்பட்டி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் 6-ம் ஆண்டு புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. ஏப்ரல் 10 -ந்தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், ரோட்டரி கிளப், ஜே.சி.ஐ. இணைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சியில் தமிழ் இலக்கியம், போட்டி தேர்வு நூல்கள், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு,அறிவியல், உள்ளிட்ட 10 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் கண்காட்சியில் உள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10%தள்ளுபடி உண்டு. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: வாக்குசாவடிகளில் நிழல் கூடாரம், குடிநீர் வசதி; தேர்தல் ஆணையம்
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்கள் வெப்ப அலையின் பாதிப்பு இல்லாமல், வாக்களிக்க […]