தூத்துக்குடி தமாகா வேட்பாளர், சைக்கிளில் சென்று மனுதாக்கல்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வேட்பாளராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ் டி ஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார்,
அவர் கூட்டணிக் கட்சி தலைவர்கள் ஆதரவாளர்கள் புடை சூழ சைக்கிளில் கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றார்.
தேர்தல் அதிகாரியான கலெக்டர் லட்சுமிபதியிடம் விஜயசீலன், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார், அப்போது வடக்கு மாவட்ட தமாக தலைவர் கே.பி.ராஜகோபால் உடனிருந்தார்.
முன்னதாக பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் தனது சின்னமான சைக்கிளில் வந்து மனு தாக்கல்செய்தார்
