• April 27, 2024

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில்.பங்குனி பெருந்திருவிழா ஏப்ரல் 5 -ந் தேதி தொடங்கி  15-ந்த்தேதி வரை நடக்கிறது.

விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மண்டகபடிதாரர்கள் சார்பில் சுவாமி அலங்காரம் வீதி உலா நடக்கிறது. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஏப்ரல் 13 அன்று தேர் திருவிழா நடக்கிறது, 14-ந் தேதி தீர்த்தவாரி ,15 -ந் தேதி தெப்பத்திருவிழா, அம்மன் பவனி நடக்கிறது.

பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று 27/03/2024 காலை 11:00 மணிக்கு மேல்11:20 மணிக்குள்

முகூர்த்த நாட்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர்,உறுப்பினர்கள்,அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *