சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வருடாபிஷேக விழா
கோவில்பட்டி சொர்ணமலையில் அமைந்துள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் சொர்ணமலை கதிரேசன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.
செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் முருகபெருமான் சிலை கிடையாது. முருகனின் ஆயுதமான வேல் தான் மூலவராக காட்சி அளிக்கிறார். தினசரி பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை மற்றும் பவுர்ணமி நாட்களில்முருப்பெருமான் போல் சந்தனத்தில் வேலுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நாட்கள் மிகவும் சிறப்பபானதாக இருக்கும். பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருவார்கள்.
சொர்ணமலை கதிரேசன் கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 வரையிலும். மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
கோவிலுக்கு பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவில் குடமுழுக்கு நடந்த நாளில் ஆண்டு தோறும் வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது,
கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோபுர கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.