• April 27, 2024

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்ணின் தற்கொலை மிரட்டல்

 கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பெண்ணின் தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டி மில் தெரு பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவருக்கும் சவுந்தர் என்பவருக்கும் இடையே இலுப்பையூரணி ஊராட்சியில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது,’

. இந்நிலையில் கோவில்பட்டி தாலூகா  அலுவலகத்தில் உள்ள  நில அளவை பிரிவினர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தின் உத்தரவினை மீறி ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாக கூறி லெட்சுமி தாலூகா அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு முன்பு இன்று காலை ததிடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

பணத்தை  வாங்கி கொண்டு அதிகாரிகள் ஒரு சார்பாக செயல்பட்டு வருவதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது  அளவீடு செய்ய முயற்சி செய்து வருவதாகவும் தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

வெகுநேரம் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி இருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட லெட்சுமியுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்;.

இது குறித்து இரு தரப்பினரையும் அழைத்து பேசி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் , அது வரை எவ்வித அளவீடும் நடைபெறாது என்று உறுதியளித்தை தொடர்ந்து லெட்சுமி போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *