தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1 ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வாடிக்கையாளர் சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, 1௦ அல்லது 11 ரம்ஜான், 19 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இத்துடன் (ஏப்ரல் 7,14,21,28) 4 ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள் ஏப்ரல் 13,27 விடுமுறையாகும். ஆக மொத்தம் இந்த மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது,.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல் தேர்தலுக்கு முந்தையநாளான ஏப்ரல் 18 மற்றும் தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப்ரல் 20 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இந்த உத்தரவை மீறி கள்ளசந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்து ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத வில்லன் நடிகராக விளங்கியவர் டேனியல் பாலாஜி. இவர் மறைந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் ஆவார். சென்னையில் வசித்து வந்த டேனியல் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி டேனியல் பாலாஜி உயிரிழந்தார். அவருக்கு வயது 48. நடிகர் டேனியல் பாலாஜியின் கண்களை தானமாக […]
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்த தடா பெரியசாமி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில்தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகில் இருக்கிறது யாதகிரிகுட்டா. இங்கு லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயம் மற்ற நரசிம்மர் ஆலயங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது. அதாவது பொதுவாக நரசிம்மர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் நரசிம்மர் யோக நரசிம்மர் ஆகவோ,உக்கிர நரசிம்மர் ஆகவோ,லட்சுமி நரசிம்மராகவோ எப்படி இருந்தாலும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். யோக நரசிம்மராக இருக்கும் போது இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த நிலையிலும் மற்ற நரசிம்மராக இருக்கையில் ஒரு காலை மடக்கி மற்றொரு […]
சுதர்ஷன் என்றால் மங்கலகரமானது, மங்கலகரமானவன் என்று அர்த்தம். ‘சக்ரா’ என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருந்துகொண்டே இருப்பது என்று பொருள். மற்ற ஆயுதங்களைப் போல் சுதர்சன சக்கரம் இல்லை. எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் வலிமையானது. அத்துடன் எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கக் கூடியது. சாதாரணமாகவே, சுதர்சன சக்கரம் என்பது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் சுண்டு விரலில் காணப்படும். மகாவிஷ்ணுவோ, தன் ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும்போது கிருஷ்ணரும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை, […]
2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என்று நினைவு கூர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள் . பெரிய வியாழனன்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரண தீர்ப்பிடப்பட்டு பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்துச் செல்லும்போது அவரை சவுக்கால் அடித்து துன்பப்படுத்தினார்கள். அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு […]
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும் 19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது. மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில் லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது, ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் […]
மத்திய உள்துறை செயலாளர் எஸ்.சி.ஓக்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- திருடர்கள் பயன்படுத்தும் சமீபத்திய திருட்டு தொழில்நுட்பம். அவர்கள் வீடு வீடாக செல்கிறார்கள். = மத்திய உள்துறை அமைச்சகத்தின் முத்திரை மற்றும் லெட்டர்பேடு ஆகியவற்றை வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர் போன்ற அடையாள அட்டைகளை வைத்திருப்பதை உறுதி செய்கிறார்கள். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும். உங்கள் குடும்பம், குடும்பங்களை சேர்ந்த குழுக்களுக்கு செய்தியைப் பரப்புங்கள் .அவர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். […]
தூத்துக்குடியில் உப்பள தொழில் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தில் 6 மாதம் உப்பு உற்பத்தி இருக்கும். 6 மாதம் மழைக்காலத்தில் தேக்கி வைத்து விற்பனை செய்யப்படும். ஏற்கனவே ஜனவரியில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி தாமதமாக மார்ச் மாதம் தான் தொடங்கியது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்தது,. தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை அளவு […]