• April 27, 2024

கனரா வங்கி கோப்பைக்கான கைப்பந்து போட்டி; படர்ந்தபுளியில் 2 நாட்கள் நடக்கிறது

 கனரா வங்கி கோப்பைக்கான கைப்பந்து போட்டி; படர்ந்தபுளியில் 2 நாட்கள் நடக்கிறது

கோவில்பட்டியை  அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும்  19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது.

மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில்  லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது,

ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் கனரா வங்கி சுழற்கொப்பைகளும், சிறந்த ஆட்டக்காரர் பரிசும் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உணவு வழங்கப்படும். நுழைவு கட்டணம் ரூ.200  என்று அறிவிக்கப்படுள்ளது. மேலும் தொடர்புக்கு 94435 84334,8939300027,9843342241,915997483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *