கனரா வங்கி கோப்பைக்கான கைப்பந்து போட்டி; படர்ந்தபுளியில் 2 நாட்கள் நடக்கிறது
கோவில்பட்டியை அடுத்த எட்டயபுரம் அருகில் உள்ள படர்ந்தபுளியில் லியா கைப்பந்து கழகம் நடத்தும் 19-ம் ஆண்டு மாநில அளவிலான கனரா வங்கி கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்து போட்டி நடக்கிறது.
மே மாதம் 11 ,மற்றும் 12 ஆகிய தேதிகளில் லியா கிளப் மைதானத்தில் காலை 8 மணிக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது,
ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணியில் வெற்றி பெரும் 8 அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 அடி உயரத்தில் கனரா வங்கி சுழற்கொப்பைகளும், சிறந்த ஆட்டக்காரர் பரிசும் வழங்கப்படும்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு உணவு வழங்கப்படும். நுழைவு கட்டணம் ரூ.200 என்று அறிவிக்கப்படுள்ளது. மேலும் தொடர்புக்கு 94435 84334,8939300027,9843342241,915997483 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.