தேர்தல் எதிரொலி: டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக த நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
அன்றைய தினம் பொதுவிடுமுறை என்பதால் டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல் தேர்தலுக்கு முந்தையநாளான ஏப்ரல் 18 மற்றும் தேர்தலுக்கு பிந்தைய நாளான ஏப்ரல் 20 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
இந்த உத்தரவை மீறி கள்ளசந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.