• June 7, 2025

Month: March 2024

கோவில்பட்டி

தேர்தல் பத்திரங்கள் விநியோகத்தை நிறுத்தக்கோரி ஸ்டேட் வங்கி முன்பு முற்றுகை போராட்டம்

  தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறுவது சட்ட விரோதம். தேர்தல் பத்திரங்கள் வினியோகிப்பதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும். வினியோகிக்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பணமாக மாற்றப்படாத பத்திரங்கள் உரிய நிறுவனங்களிடம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. உச்ச நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்து உத்தரவு பிறப்பித்த பிறகும் தேர்தல் பத்திரம் முறை கேடு செய்பவர்களை காப்பாற்றும் உள்நோக்கத்துடன் செயல்படும் […]

செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரியில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் மதிமுக

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் இன்று (7.3.2024 வியாழன்) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உழைக்கும் மகளிருக்கான விருது

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்.அங்கன்வாடி பணியாளர்,செவிலியர், காவல் துறை மற்றும் நிறுவன பெண் பணியாளர்கள் ஆகியோருக்கு உழைக்கும் மகளிருக்கான விருதுகள் ஆசியாபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை தாங்கினார்.காவல் உதவி ஆய்வாளர் கமலாதேவி,   பூவலிங்கம் செட்டியார் தொடக்க பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசியாகேண்டி உரிமையாளர் பத்மாபாபு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன பணியாளர் மெக்ஸி அனைவரையும் வரவேற்றார். கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி […]

கோவில்பட்டி

தேமுதிக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம்

விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேமுதிக  சார்பில் ஒன்றியசெயலாளர் ஜெயக்குமார் தலைமையில்  பசுவந்தனையில் ஓட்டபிடாரம் கிழக்கு ஒன்றிய பூத்முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்டதேமுதிக செயலாளர் சுரேஷ் பூத்வாரியாக வாக்காளர் பட்டியல் வழங்கினார்  கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதாஅடையாளம் காட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய தீர்மானிக்கப்பட்டது ஆலோசனை கூட்டத்தில் செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழுஉறுப்பினர் எல்லப்பன், கோவில்பட்டி ஒன்றியசெயலாளர் பெருமாள்சாமி, ஒன்றிய அவைதலைவர் ஜெயகிருஷ்னன், துனைசெயலாளர் மகராஜன், பசுவந்தனை செயலாளர் ஜெய்சங்கர், காட்டுநாயக்கன்பட்டி கருப்பசாமி உள்பட […]

செய்திகள்

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2016 ம் ஆண்டு அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிட்ட போது திமுக சார்பில் சிம்லா முத்துசோழன்  வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார். ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டபோது தொகுதி முழுவதும் வலம் வந்தார். இதனால் ஜெயலலிதா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது, ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டதால் தமிழகம் முழுவதும் சிம்லா முத்துசோழன் பிரபலம் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு […]

சினிமா

நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜர்பைஜானில் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் அந்த போர்ஷன் முடிந்து சென்னைக்கு திரும்பினார். இந்த நிலையில்: நடிகர் அஜித் குமார் சென்னை அப்போலா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்குத் தான் நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் மூலம் ரூ. 7,390கோடி ஊழல் செய்த மோடி அரசை கண்டித்து. தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கோவில்பட்டி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில். இன்று காலை 10 மணி  அளவில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பொன்னுசாமி பாண்டியன் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி, மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் […]

ஆன்மிகம்

சிவபெருமானின் 25 அவதாரங்களும், இருப்பிடங்களும்…

1) சோமாஸ்கந்தர் – திருவாரூர் 2) நடராஜர் – சிதம்பரம் 3) ரிஷபாரூடர் – வேதாரண்யம் 4) கல்யாணசுந்தரர் – திருமணஞ்சேரி 5) சந்திரசேகரர் – திருப்புகலூர் 6) பிட்சாடனர் – வழுவூர் 7) காமசம்ஹாரர் – குறுக்கை 8) காலசம்ஹாரர் – திருக்கடயூர் 9) திரிபுராந்தகர் – திருவதிகை 10) கஜசம்ஹாரர் – வழுவூர் 11) வீரபத்திரர் – கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர் 12) தட்சிணாமூர்த்தி – ஆலங்குடி 13) கிராதகர் – கும்பகோணம் 14) […]

கோவில்பட்டி

எட்டயபுரம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கக்கோரி நகராட்சி ஆணையரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு

கோவில்பட்டி  நகராட்சி அலுவலகம் முன்பு பாஜக நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன் தலைமையில் 20 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் முன்னிலையில் நிர்வாகிகள் கூடினார்கள். பின்னர் அவர்கள் நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் ஆணையாளரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- கோவில்பட்டி நகராட்சியில் 20-வது வார்டுக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலையின் இருபுறமும் புதிதாக பகிர்மான குழாய் அமைப்பதற்காக கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19.6.23 ந்தேதி ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் […]

செய்திகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி வழக்கறிஞர்களும், சட்ட கல்லூரி மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் 8 வது நாளாக சென்னையில் இன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் சந்தித்து பேசினார். அப்போது அவர் “இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 உட்பிரிவின்படி மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சட்டம் இருக்கும் பொழுது […]