கோவில்பட்டியில் உழைக்கும் மகளிருக்கான விருது

கோவில்பட்டி பகுதியில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்படும் ஆட்டோ ஓட்டுநர்.அங்கன்வாடி பணியாளர்,செவிலியர், காவல் துறை மற்றும் நிறுவன பெண் பணியாளர்கள் ஆகியோருக்கு உழைக்கும் மகளிருக்கான விருதுகள் ஆசியாபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஆசியாபார்ம்ஸ் பாபு தலைமை தாங்கினார்.காவல் உதவி ஆய்வாளர் கமலாதேவி, பூவலிங்கம் செட்டியார் தொடக்க பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் ஆசியாகேண்டி உரிமையாளர் பத்மாபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவன பணியாளர் மெக்ஸி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன் நிஷாபேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உழைக்கும் மகளிர்க்காண விருதுகளை வழங்கி பேசினார்.

வழக்கறிஞர் ஜெய்ஸ்ரீகிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் தினம் பற்றி விளக்கி பேசினார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிறுவன பணியாளர் சரண்யா நன்றி கூறினார்.
