• June 7, 2025

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்

 ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2016 ம் ஆண்டு அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிட்ட போது திமுக சார்பில் சிம்லா முத்துசோழன்  வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார்.

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டபோது தொகுதி முழுவதும் வலம் வந்தார். இதனால் ஜெயலலிதா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது,

ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டதால் தமிழகம் முழுவதும் சிம்லா முத்துசோழன் பிரபலம் ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. வக்கீல் மருது கணேஷ் போட்டியிட்டு டி.டி.வி.தினகரனிடம் தோல்வி அடைந்தார்.

இதனால் ஏமாற்றத்துடன் இருந்த சிம்லா முத்துசோழன் தற்போது சென்னையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா எம். எல். ஏ.உடன் இருந்தார்.

சிம்லா முத்துசோழன் திமுகவில் இருந்து விலகியது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *