கோவில்பட்டியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் மூலம் ரூ. 7,390கோடி ஊழல் செய்த மோடி அரசை கண்டித்து. தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கோவில்பட்டி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில். இன்று காலை 10 மணி அளவில் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பொன்னுசாமி பாண்டியன் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், வட்டார தலைவர் ரமேஷ் மூர்த்தி, மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஐ.என்.டி.யு.சி. ராஜாசேகரன், sc/st பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, ஊடகபிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜாசேகரன், மாவட்ட பொது செயலாளர் சிவப்பிரகாசம், மாநில காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேஷ்குமார், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ், வட்டார தலைவர், செல்லதுரை, மரியசூசை ராஜ், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் பழனி சாமி, ஆறுமுகம், கிருஷத்துராஜா, அருணாச்சலம்,ஆல்வின், தர்மர், ஆறுமுகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
