• June 7, 2025

எட்டயபுரம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கக்கோரி நகராட்சி ஆணையரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு

 எட்டயபுரம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கக்கோரி நகராட்சி ஆணையரிடம் பா.ஜனதா கட்சியினர் மனு

கோவில்பட்டி  நகராட்சி அலுவலகம் முன்பு பாஜக நகரத் தலைவர் போலீஸ் சீனிவாசன் தலைமையில் 20 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார் முன்னிலையில் நிர்வாகிகள் கூடினார்கள்.

பின்னர் அவர்கள் நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் ஆணையாளரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

கோவில்பட்டி நகராட்சியில் 20-வது வார்டுக்கு உட்பட்ட எட்டயபுரம் சாலையின் இருபுறமும் புதிதாக பகிர்மான குழாய் அமைப்பதற்காக கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19.6.23 ந்தேதி ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது,

ஆனால் ஒரு புறம் மட்டும் பகிர்மான குழாய் அமைத்தும் அந்த குழாயிலும் சரியாக குடிநீர் வழங்கவில்லை. மேலும் 6 மாதம் ஆகியும் இன்னொரு புறமும் ப குடிநீர் பகிர்மான குழாய் அமைக்கவில்லை.

எனவே எட்டயபுரம் சாலையில் ஒரு புறம் மட்டும் அமைக்கப்பட்ட குழாயில் சரியாக குடிநீர் வழங்கவும், இன்னொரு புறம் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக குடிநீர் குழாய் அமைத்திட வேண்டும்.

இல்லையென்றால் ப.ஜனதா கட்சி கோவில்பட்டி நகரம் சார்பில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் தொடங்கி அந்த குழாய் பணிகள் அமைத்திடும் வரை நகராட்சியில் குடியேறும் போராட்டம் (நகராட்சியில் குடியேறி உணவு சமைக்கும் போராட்டத்தை வெளிப்படுத்துவோம்) நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேற்கண்ட தகவலை ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *