• June 8, 2025

Month: March 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, தெட்ஷனவிநாயகர் கிரிவல யாத்திரை குழு, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய துவக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார்.கிரிவல யாத்திரை குழு தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.   கண் விழி பரிசோதகர் மகேஷ்வரி 60 நபர்களுக்கு பரிசோதனை செய்தார். 18 பேர் […]

செய்திகள்

காங்கிரசார் வடை சுடும் நூதன போராட்டம்

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர்  சின்னதம்பி தலைமையில் வடை சுடும் நூதன போராட்டம் நடைபெற்றது சென்னை, அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே நடந்த இந்தப் போராட்டத்துக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார்.  காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், கோல்டன் ரபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி  பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி; மாணவர்கள் அசத்தல்

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.மாணவர்கள் தங்களது கலை திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.    கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு பொருள்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. கைவினைப் பொருட்கள் கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.பள்ளி நிர்வாக குழு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆக்கி மைதானத்தை பாதுகாக்க கோரி ஆர். டி. ஓ. அறையில் தரையில்

 ஆக்கி நகரம் என்று அழைக்கப்படும் கோவில்பட்டியில் குப்புசாமி நாயுடு நினைவு அகில இந்திய ஆக்கி போட்டி என்றால்மிகவும் பிரபலம்.  கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள மைதானத்தில் ஆண்டுதோறும் நடந்து வந்த அகில இந்திய ஆக்கி போட்டியில்  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும்.  இந்த போட்டி கோவில்பட்டி ரசிகர்களுக்கு  விருந்தாக அமைந்து வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த இந்த போட்டி சமீப காலமாக நிறுத்தப்பட்டு விட்டது.இதனால் அந்த ஆக்கி மைதானம் பராமரிப்பு இன்றி பாழடைந்து போனது. […]

கோவில்பட்டி

67கிராமஊராட்சிகளில் சமூக தணிக்கை  சிறப்பு கிராமசபை கூட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் 67 கிராம ஊராட்சிகளில் கடந்த 11ம்தேதி முதல் 15ம் தேதி வரை  சமூகத்தணிக்கை நடந்தது. சிபி கிராம வள பயிற்றுநர்கள் சமூகத் தணிக்கையின் போது தயார் செய்த  அறிக்கை கிராம சபை கூட்டத்தில்ஒப்புதல் பெறப்பட்டது. ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சில்லாநத்தம் கிராம ஊராட்சியில் நடந்த சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் சண்முக லட்சுமி தலைமை தாங்கினார்  ஊராட்சி […]

செய்திகள்

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

குமரி மாவட்டம் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அகத்தீஸ்வரம் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இக்கூட்டத்தில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவர்கள் சரத்குமார், ஜான்பாண்டியன் உள்ள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேடையில் இருந்த கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்தார். முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த பிரதமர்  மோடியை மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மந்திரி பொன் […]

செய்திகள்

தமிழ்நாட்டில்  4 புதிய மாநகராட்சிகள்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில்  புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி,  திருவண்ணாமலை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. மேலும்  கோவில்பட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாதனை பெண்களுக்கு பாராட்டு

கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் மற்றும் ஜெய் கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உழைக்கும் மகளிர் தின விழா  நடைபெற்றது. இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வி.சுப்பாராஜ், நகர செயலாளர் நம்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.  இந்நிகழ்ச்சியில் சட்ட படிப்பில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவி கி.கார்மல்ஜென்ஸி, காவல் ஆய்வாளர் கமலாதேவி, அரசு மருத்துவர் மருத்துவர் வே.சுதா, […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடாமல் புறக்கணிக்க முடிவு?

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முதற்கட்ட  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஒ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோருக்கு தலா 4 தொகுதிகள் ஒதுக்குவது என்று பேசப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் 6 இடங்களை  கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக […]

ஆன்மிகம்

எட்டுக்குடி முருகன் கோவில் …

திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அறுபடை வீடு முருகன் கோவில்கள் தவிர புகழ் பெற்ற முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஒன்று. இது மிக பழமையான கோவில்களில் ஒன்று. அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து பாடல்கள் இயற்றியுள்ளார். எட்டுக்குடி முருகன் தலத்தில் சஷ்டி விரதத்தையும் கவுரி விரதத்தையும் ஒன்றாக கடைபிடிப்பது சிறப்பு. தீபாவளியன்று கொண்டாடப்படும் கேதார கவுரி விரதம் தோன்றிய தலம் இதுதான். இங்குள்ள முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீதமர்ந்து காட்சி […]