• June 8, 2025

கோவில்பட்டியில் சாதனை பெண்களுக்கு பாராட்டு

 கோவில்பட்டியில் சாதனை பெண்களுக்கு பாராட்டு

கோவில்பட்டி சவுபாக்யா மஹாலில் இந்திய கலாச்சார நட்புறவுக்கழகம் மற்றும் ஜெய் கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உழைக்கும் மகளிர் தின விழா  நடைபெற்றது.

இந்திய கலாச்சார நட்புறவுக்கழகத்தின் மாநில செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வி.சுப்பாராஜ், நகர செயலாளர் நம்.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் சட்ட படிப்பில் தமிழகத்திலேயே முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற மாணவி கி.கார்மல்ஜென்ஸி, காவல் ஆய்வாளர் கமலாதேவி, அரசு மருத்துவர் மருத்துவர் வே.சுதா, பெண்ணுரிமை போராளி மேரிஷீலா, கவிஞர் ஜெயாஜனாத்தனன். உள்ளிட்ட தத்தம் துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் பெண்களை கவுரவித்து பாராட்டு செய்யப்பட்டது.

 நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களை பாராட்டி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ராஜம் தாம்சன் பதக்கங்களை அணிவித்தார், தொழில் அதிபர்கள் விநாயகா, ரமேஷ் அபிராமி முருகன், ரவிமாணிக்கம், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் க.கருத்தப்பாண்டி, பொ. முத்துச் செல்வம், புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வெ.மு.லட்சுமண பெருமாள், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின்,  கருப்பசாமி, உரத்த சிந்தனை சிவானந்தம்,  பகத்சிங் ரத்ததான கழகம் காளிதாஸ், நாம் தமிழர் கட்சி ரவிகுமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், இலக்கிய விழா பார்த்திபன் ஆகியோர் பேசினர்.

 உலக தமிழ்ச்சங்க நிர்வாகி முருகசரஸ்வதி ஏற்புரை நிகழ்த்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *