• June 8, 2025

தமிழ்நாட்டில்  4 புதிய மாநகராட்சிகள்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

 தமிழ்நாட்டில்  4 புதிய மாநகராட்சிகள்; மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில்  புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி,  திருவண்ணாமலை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. மேலும்  கோவில்பட்டி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். ஆனால் அது நிறைவேறாதது, ஏமாற்றத்தை அளித்துள்ளது,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *