• June 8, 2025

நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடாமல் புறக்கணிக்க முடிவு?

 நாடாளுமன்ற தேர்தலில்    ஓ.பன்னீர்செல்வம் அணி போட்டியிடாமல் புறக்கணிக்க முடிவு?

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் முதற்கட்ட  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஒ.பி.எஸ். மற்றும் தினகரன் ஆகியோருக்கு தலா 4 தொகுதிகள் ஒதுக்குவது என்று பேசப்பட்டது.

ஓ பன்னீர்செல்வம் 6 இடங்களை  கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற பா.ஜனதா பிரசார கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ,மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்..

இது பற்றி விசாரித்தபோது ஓ .பன்னீர்செல்வத்துக்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் அந்த 2 தொகுதியிலும் தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு ஒப்புக்கொண்டால் அதிமுகவுக்கு உரிமை கோரவோ, இரட்டை இலை சின்னம் கோரியோ கோர்ட்டில் வழக்கு விசாரணையில் வாதாட முடியாது.. எனவே தேர்தலில் போட்டியிடாமல் பா.ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் சொல்லி விடலாமா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *