கோவில்பட்டி ஆக்கி மைதானத்தை பாதுகாக்க கோரி ஆர். டி. ஓ. அறையில் தரையில் அமர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டம்

ஆக்கி நகரம் என்று அழைக்கப்படும் கோவில்பட்டியில் குப்புசாமி நாயுடு நினைவு அகில இந்திய ஆக்கி போட்டி என்றால்மிகவும் பிரபலம்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள மைதானத்தில் ஆண்டுதோறும் நடந்து வந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும்.
இந்த போட்டி கோவில்பட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வந்தது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்த இந்த போட்டி சமீப காலமாக நிறுத்தப்பட்டு விட்டது.இதனால் அந்த ஆக்கி மைதானம் பராமரிப்பு இன்றி பாழடைந்து போனது.
தமிழக அரசு சார்பில் செயற்கை புல்வெளி ஆக்கி மைதானம் அழைக்கப்பட்ட பிறகு, அங்கு ஆக்கி போட்டியில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பசுவந்தனை சாலையில் உள்ள ஆக்கி மைதானம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதாவது கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் உள்ள குப்புசாமி நாயுடு ஆக்கி மைதானம் பப்ளிக் டிரஸ்ட்க்கு சொந்தமானது. எனவே இம் மைதானத்தை விளையாட்டிற்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும். மைதானத்தை ஆக்கிரமிக்கவோ, பிளாட்டுகளாக விற்கவோ கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே இம் மைதானத்தை மாவட்ட
நிர்வாகம் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சீனிவாசன் தலைமையில் சிலர் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் அலுவலகம் சென்று அவரை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
மேலும் திடீரென அவர்கள் கோட்டாட்சியர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பாராத கோட்டாட்சியர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மனுவைப் பெற்றுக் கொண்டு அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
