• June 8, 2025

கோவில்பட்டி  பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி; மாணவர்கள் அசத்தல்

 கோவில்பட்டி  பள்ளியில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி; மாணவர்கள் அசத்தல்

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடந்தது.மாணவர்கள் தங்களது கலை திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்களை தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

   கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஒவ்வொரு பொருள்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

கைவினைப் பொருட்கள் கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர்.

பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன்,மணிக்கொடி ஆகியோர் முன்னிலை  வகித்தனர். தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டு ஆங்கிலத்திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர் நாகராஜ்,மேற்பார்வையாளர் பட்டாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள்காந்த்ராஜ் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *