காங்கிரசார் வடை சுடும் நூதன போராட்டம்

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையை கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி தலைமையில் வடை சுடும் நூதன போராட்டம் நடைபெற்றது
சென்னை, அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே நடந்த இந்தப் போராட்டத்துக்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார்.
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், கோல்டன் ரபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
