• June 8, 2025

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

 கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, தெட்ஷனவிநாயகர் கிரிவல யாத்திரை குழு, கிருஷ்ணன் கோவில் சங்கரா கண்மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய துவக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் க.தமிழரசன் தலைமை தாங்கினார்.கிரிவல யாத்திரை குழு தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.

  கண் விழி பரிசோதகர் மகேஷ்வரி 60 நபர்களுக்கு பரிசோதனை செய்தார். 18 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

   முகாமில் நடராஜபுரம் பொது மக்கள் நல வாழ்வு இயக்க தலைவர் செண்பகம், ஆவல்நத்தம் லட்சுமணன், கட்டிட தொழிலாளர்கள் சங்க தலைவர் உத்தண்டராமன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், தொழிலாளர் விடுதலை முன்னணி ஈஸ்வரன், கலைச்செல்வன், மற்றும் சங்கரா கண்மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *