. அ.திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் நடிகை கவுதமி இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நடிகை கவுதமி சந்தித்து கட்சியில் சேர்ந்தார். ஏற்கனவே, பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகி அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கவுதமி சேர்ந்துள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து அதிமுக வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று நடிகை கவுதமி தெரிவித்தார்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் எனப்படும் விபூதி புதனோடு 40 நாட்கள் தவக்காலம் இன்று (14ம் தேதி) தொடங்கினர். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியின் நடுவே கிறிஸ்தவர்கள் நெற்றியில் திருநீறு(விபூதி) பூசி வழிபடும் திருச்சடங்கு நடைபெற்றது. கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுகளுடன் இன்று தொடங்கியது. திருத்தல பங்கு தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார்,உதவி பங்கு தந்தை அருட்திரு அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து திருத்தலத்தில் திருப்பலி […]
கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெங்கநாதன் குமராபுரம் கிளை செயலாளர் சரோஜா, .நகர செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்டம் நிர்வாக உறுப்பினர் பரமராஜ்,மாவட்டம் குழு உறுப்பினர் முனியசாமி, நகர உதவி செயலாளர் கண்ணம்மா,மாவட்டம் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசால் செப்டம்பர் 2023 முதல் வழங்கிவரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன் தலைமையின் கீழ் ஜோதிபாஸூ மற்றும் செல்லப்பாண்டி ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கோவில்பட்டியில் நேற்று (13.2.2024) 40 உணவு வணிகர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா, குழம்பு மற்றும் டீ பார்சல் கட்ட வைத்திருந்த 5 கிலோ அனுமதியற்ற பிளாஸ்டிக் பைகளும், வடை […]
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி திருச்சியில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் இடம் பெற்றது. இதன் மூலம் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக போட்டியில் கால் இறுதிவரை முன்னேறி கேலோ இந்தியா போட்டிகளுக்கு தகுதி பெற்றது. கேலோ இந்தியா போட்டிகள் வருகிற பிவருகிற 19ஆம் தேதி முதல் 26 வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் […]
கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கிராமத்தில் காசி விசாலாட்சி அம்மாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது. சங்கர பாரதி மடத்திற்கு பாத்தியப்பட்ட இந்த பழமையான கோவிலில் காசி விஸ்வநாதரும், காசி விசாலாட்சியும் கழுகுமலை கோவிலில் உள்ளது போல் ஒரே கரு மண்டபத்தில் தனித்தனியாக காட்சி அளிக்கிறார்கள். காசி விஸ்வநாதர் கரு மண்டபத்தை சுற்றி தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், காலபைரவர் சன்னதிகள் […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எல். பாலாஜி சரவணன்) கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலைய போலீசாருக்கு அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்சய் அணில் கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை […]
கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் வெள்ளத்துரை (35) இவர் கொத்தனராக பணியாற்றி வருகிறார், இவருக்கு திருமணம் முடிந்து மரியா என்ற(30) வயது மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் தினமும் வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய் அருகேயுள்ள கினற்றிற்கு சென்று அங்கே மது அருந்திவிட்டு குளிப்பது வாடிக்கை இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த இவரது உறவினர்கள் 2 நபர்களுடன் வழக்கம்போல குளிக்கச் சென்றார். கிணற்றின் அருகே அமர்ந்து மூவரும் மது அருந்தினர். பின்னர் கிணற்றில் […]
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்க நிறுவனத் தலைவா் , டாக்டர். வி.கெங்குசாமி நாயுடு 6 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கோவில்பட்டியில் கெங்குசாமி நாயுடு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கம்மநாயுடு மகாஜன சங்க மண்டல செயல் தலைவா் செல்வராஜ் , பொருளாளர் கோபாலகிருஷ்ணன் , மண்டல இணை செயலாளா் கற்பூராஜ் , மாநில செயற்குழு உறுப்பினா் ஜெகன் மோகன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் […]
கோவில்பட்டியில் யு பி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 23வது ஆண்டு விழா நடைபெற்றது.கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்,பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் பரமசிவம்,பள்ளி முதல்வர் அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு 10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுக ள் வழங்கினார், ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி,பாளையம்பட்டி ஜமீன்தார் பத்ம ராஜா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்கள். […]