கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது ; தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் எனப்படும் விபூதி புதனோடு 40 நாட்கள் தவக்காலம் இன்று (14ம் தேதி) தொடங்கினர்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியின் நடுவே கிறிஸ்தவர்கள் நெற்றியில் திருநீறு(விபூதி) பூசி வழிபடும் திருச்சடங்கு நடைபெற்றது.
கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்தவ மக்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுகளுடன் இன்று தொடங்கியது. திருத்தல பங்கு தந்தை அருட்திரு சார்லஸ் அடிகளார்,உதவி பங்கு தந்தை அருட்திரு அந்தோணிராஜ் அடிகளார் இணைந்து திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றினர்.

பின்னர் இறை மக்கள் அனைவர் நெற்றியிலும் ‘மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என சாம்பலில் சிலுவை அடையாளம் இட்டனர்.
இது மக்கள் நாம் வாழும் காலங்களில் ஆணவம்,அகந்தை இல்லாமல் அனைவரிடமும் சமமாக நடத்து கொள்ள வேண்டும் என்றும். கடவுள் விரும்பும் மக்களாக வாழ வேண்டும் என கடவுள் இஸ்ரேல் மக்களை புடம்போட்டதை நினைவு கூர்ந்து 40 நாட்கள் தவக்காலங்களாக அனுசரிக்கிறோம் என்பதாகும்.
இதே போல சூசையப்பர் திருத்தலத்தின் அனைத்து கிளை கிராமங்களிலும் சாம்பல் புதன் நிகழ்வுகள் நடைபெற்றது
.
