• June 8, 2025

தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைதொகை வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

 தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைதொகை வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் ரெங்கநாதன் குமராபுரம் கிளை செயலாளர் சரோஜா,

.நகர செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்டம் நிர்வாக உறுப்பினர் பரமராஜ்,மாவட்டம் குழு உறுப்பினர் முனியசாமி, நகர உதவி செயலாளர் கண்ணம்மா,மாவட்டம் குழு உறுப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசால் செப்டம்பர் 2023 முதல் வழங்கிவரும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும் எனக் கூறி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பல தகுதியான குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. குடும்ப அட்டை தரவில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேல்முறையீடு செய்துள்ள குடும்ப அட்டைகளுக்கு இந்நாள் வரை எவ்விதமான குறுஞ்செய்தி தகவல் இல்லை. எனவே தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும்  என்று கோரி ஆர்ப்பாட்டம் இறுதியில் தாசில்தாரிடம் மனு வழங்கினார்கள் .

உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *