• June 8, 2025

கோவில்பட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடத்திய ஆய்வு ; திறந்தவெளியில் வைத்திருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா பறிமுதல் செய்து அழிப்பு

 கோவில்பட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நடத்திய ஆய்வு ; திறந்தவெளியில் வைத்திருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா பறிமுதல் செய்து அழிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர்.ச.மாரியப்பன்  தலைமையின் கீழ் ஜோதிபாஸூ மற்றும் செல்லப்பாண்டி ஆகிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கோவில்பட்டியில்  நேற்று (13.2.2024) 40 உணவு வணிகர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா, குழம்பு  மற்றும் டீ பார்சல் கட்ட வைத்திருந்த 5 கிலோ அனுமதியற்ற பிளாஸ்டிக் பைகளும், வடை பரிமாற வைத்திருந்த 3 கிலோ அச்சிட்ட காகிதங்களும், காலாவதி தேதி குறிப்பிடப்படாத 10 கிலோ நொறுக்குத் தீனிகளும், அதிக நிறமி சேர்க்கப்பட்ட 1.5 கிலோ சிக்கனும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், நியூஸ் பேப்பர் உள்ளிட்ட அச்சிட்ட காகிதங்களும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனுமதியற்ற பிளாஸ்டிக்குகளையும் பொட்டலமிடப் பயன்படுத்திய மகிமா டீ ஸ்டால்,  செக்கடி செல்வ கணேஷ் கூல்டிரிங்ஸ், ஸ்ரீ லிங்கம் பேக்கரி அண்ட் ஸ்வீட்ஸ், திவ்யா பரோட்டா ஸ்டால், மரியாள் டீ ஸ்டால், எம்.கே சிக்கன் ஸ்டால், ஸ்ரீ  மாரீஸ்வரி டீ ஸ்டால், மகரம் டீ ஸ்டால், ஸ்ரீ சக்தி விநாயகர் டீ ஸ்டால், மகரம் டீ ஸ்டால், ஆவின் பாலகம், அண்ணா ஐஸ்லேண்ட், மணி டீ ஸ்டால், மகரம் டீ ஸ்டால், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரெஸ்டாரண்ட், ஆவின் பாலகம் ஆகிய கடை உரிமையாளர்களுக்கு  அபராதம் விதிக்க கோரி சம்பந்தப்பட்ட பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரால் நியமன அலுவலரிடத்தில் வழக்கு பதிவு செய்யப்படும்.

 அவை பரிசீலனை செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் அனுமதியற்ற பிளாஸ்டிக் பயன்படுத்திய பதிவுச் சான்றிதழ் பெற்ற வணிகர்களுக்கு தலா ரூ. 2000, நியூஸ் பேப்பர் பயன்படுத்தியவர்களுக்கு தலா ரூ.1000, பதிவுச் சான்றிதழ் இல்லாதோருக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.உரிமம் பெற்ற வணிகர்களுக்கு எதிரான வழக்குகள் வருவாய் அலுவலருக்கு மாற்றப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாத இரண்டு கடைகள் மற்றும் சமைக்கும் இடத்தில் மாஸ்டர் புகைபிடித்ததினால் ஒரு உணவகம் ஆகியவற்றின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான ஆணை நியமன அலுவலரால் பிறப்பிக்கப்படும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *