கவுகாத்தியில் கேலோ இந்தியா போட்டி : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி பங்கேற்கிறது

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆண்கள் ஆக்கி அணி திருச்சியில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற போட்டியில் முதல் இடம் பெற்றது.
இதன் மூலம் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற அகில இந்திய பல்கலைக்கழக போட்டியில் கால் இறுதிவரை முன்னேறி கேலோ இந்தியா போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
கேலோ இந்தியா போட்டிகள் வருகிற பிவருகிற 19ஆம் தேதி முதல் 26 வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்க உள்ளன. இதில் பங்கேற்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வீரர்களை பாராட்டி வீரர்களுக்கு சீருடைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வி துறை இயக்குனர் முனைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கே ஆர் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் மதிவாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினார்
மற்றும் கோவில்பட்டி விளையாட்டு மைதான மேலாளர் ரோஸி, காமராஜ் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலசிங்கம், வ உ சி கலைக் கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் சிவஞானம்,புளியங்குடி மனோ கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குமரேசன் சீனிவாசன், கே ஆர் கலைக்கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் ராம்குமார் மற்றும் ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் கடையநல்லூர் அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனரும் பல்கலைக்கழக அணி மேலாளருமான முனைவர் குருசித்திர சண்முகம் பாரதி, அணியின் துணை பயிற்சியாளர் காளிமுத்து பாண்டிராஜா,முன்னாள் ஆக்கி வீரர் மோகன் ஆகியோர் வீரர்களை பாராட்டி வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர்
