• June 8, 2025

மந்தித்தோப்பு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி; நன்கொடை அளிக்க வேண்டுகோள் 

 மந்தித்தோப்பு காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி; நன்கொடை அளிக்க வேண்டுகோள் 

 கோவில்பட்டியை அடுத்த மந்திதோப்பு கிராமத்தில் காசி விசாலாட்சி அம்மாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது. 1000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் தினமும் இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது.

 சங்கர பாரதி மடத்திற்கு பாத்தியப்பட்ட இந்த பழமையான கோவிலில் காசி விஸ்வநாதரும், காசி விசாலாட்சியும் கழுகுமலை கோவிலில் உள்ளது போல் ஒரே கரு மண்டபத்தில் தனித்தனியாக காட்சி அளிக்கிறார்கள்.

 காசி விஸ்வநாதர் கரு மண்டபத்தை சுற்றி தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், காலபைரவர் சன்னதிகள் உள்ளன.

 மேலும் கோவிலுக்கு வெளிப்புறம் நவகிரக சன்னதியும், ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது.

 தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைக்கு பிறகு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மறுபடியும்  மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைக்குப் பிறகு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

ழமையும்,பெருமையும் வாய்ந்த இக் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் நடக்க இருக்கிறது.  கூனம்பட்டி, கல்யாணபுரி ஆதீனம் குரு வருளாலும் திருவருளாலும் இந்த கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி நடத்தப்படுகிறது.

 கோவில் திருப்பணிக்காகவும், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்காகவும், யாகசாலை  பூஜைகளுக்கும் தேவையான பொருள் உதவி,நிதி உதவி அளிக்க விரும்பும் பக்தர்கள், சங்கர பாரதி மடத்தின் மடாதிபதி நடராஜ பாரதியை 96785 21004 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் பீமபாரதியை 99943 90970 என்ற அலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.

 யாகசாலை பூஜைகள் நடைபெறும் போது சங்கல்பத்தில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் கும்பாபிஷேகத்துக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கி யாகசாலை பூஜையில் கலந்து கொள்ளலாம் என்று  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *