கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

கோவில்பட்டி இலுப்பையூரணி மறவர் காலனியை சேர்ந்த சங்கரபாண்டி மகன் வெள்ளத்துரை
(35) இவர் கொத்தனராக பணியாற்றி வருகிறார், இவருக்கு திருமணம் முடிந்து மரியா என்ற(30) வயது மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
இவர் தினமும் வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய் அருகேயுள்ள கினற்றிற்கு சென்று அங்கே மது அருந்திவிட்டு குளிப்பது வாடிக்கை இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த இவரது உறவினர்கள் 2 நபர்களுடன் வழக்கம்போல குளிக்கச் சென்றார்.
கிணற்றின் அருகே அமர்ந்து மூவரும் மது அருந்தினர். பின்னர் கிணற்றில் குளித்த மூவரில் இருவர் மட்டும் வெளியே வந்த நிலையில் வெள்ளத்துரை வெளியே வரவில்லை என்பதை அறிந்த அவரது உறவினர்கள் இருவரும் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர்.
. இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வெள்ளத்துரை யின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
