• June 7, 2025

Month: February 2024

கோவில்பட்டி

எட்டையபுரத்தில் 25-ந் தேதி  மினி மாரத்தான் போட்டி

கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் மாபெரும் மினி மாரத்தான் போட்டி_ வருகிற 25.2.2024 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு எட்டையபுரம் பாரதி மில் அருகில் இருந்து தொடங்குகிறது. ஆண்களுக்கு 6 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ.தூரம் மாரத்தான் போட்டி நடக்கிறது.போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு – ரூ.4000/- மற்றும் பதக்கம், இரண்டாம் பரிசு – ரூ.3000/- மற்றும் பதக்கம். மூன்றாம் பரிசு  ரூ.2000/- பதக்கம் வழங்கப்படுகிறது.போட்டியில் […]

தூத்துக்குடி

நகைகடை உரிமையாளரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் மகன் மந்திரம்.இவருக்கும் ராமசாமி மகன் பரமசிவம் மற்றும் அவரது சகோதரருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 28.1.2017 அன்று மந்திரத்தின் நகைக்கடைக்குள் நுழைந்த பரமசிவம் மந்திரத்திடம் தகராறு செய்து இரும்பு பட்டையால் அவரை தாக்கியதோடு நகை கடை ஷோ கேசையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிபதி  செல்வம் 19.2.24 அன்று குற்றம் சாட்டப்பட்ட […]

செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண்ணை எரித்துக்கொன்ற 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 

கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் பகுதியில்  கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர். இந்த கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இன்று […]

தூத்துக்குடி

மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயங்களை ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 710 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் லட்சுமிபதி  அறிவுறுத்தினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி வழங்கும் […]

செய்திகள்

காங்கிரஸ் புதிய தலைவர் செல்வ பெருந்தகை, முதல் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய தலைவராக செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். இந்த பொறுப்புக்கு பல்வேறு கோஷ்டிகளின் சார்பில் போட்டி கடுமையாக இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் செல்வ பெருந்தகையை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதை தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள்  தலைவர்களை செல்வ பெருந்தகை சந்தித்தார். பின்னர் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,  அப்போது அவருக்கு ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். செல்வபெருந்தகை சட்டசபை காங்கிரஸ்  தலைவராக […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தமிழ் தெரிந்த ஊழியரை நியமிக்க கோரி போராட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில் ரெயில் நிலையத்தில் பயண சீட்டு கொடுக்கும் இடத்தில் தமிழ் தெரிந்த அலுவலரை நியமிக்க வேண்டும், மின் விளக்கு வசதி செய்து தர வேண்டும் என கோரி நகர செயலாளர் சரோஜா தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது, இதில் தாலுகா செயலாளர் பாபு,ஏ ஐ டி யூ சி மாவட்ட பஞ்சாலை தலைவர் பரமராஜ்,சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம்,நகர துணை செயலாளர் முனியசாமி,வழக்கறிஞர் ரஞ்சனி கண்ணம்மா,மகளிரணி […]

கோவில்பட்டி

அரிசி, பூண்டு விலை உயர்வு

தமிழ்நாட்டில் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளன. குறிப்பாக கடந்த 2 மாதத்தில் சாப்பாடு அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.2௦ வரை உயர்ந்துள்ளது.ஒரு கிலோ ரூ.65க்கு விற்ற அரிசி இப்போது ரூ.85 க்கு விற்பனை ஆகிறது. விலை உயர்வுக்கு நெல் விளைச்சல் பாதிப்பு என்று காரணம் சொல்கிறார்கள். இதே போல் பூண்டு விலை ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. கிலோ ரூ.300 வரை விற்ற பூண்டு தற்போது ரூ.500ஐ தாண்டி […]

செய்திகள்

தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்தார்.  3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய  தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் , கே.எஸ். அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில்  5 ஆண்டுகளாக இருந்து வந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி நீக்கப்பட்டு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய […]

கோவில்பட்டி

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே. மு. தி. க. தேர்தல் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தே. மு. தி. க.சார்பில் மாவட்டசெயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில்  நாடளுமன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது  நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அனைத்து ஒன்றியசெயலாளர்களுக்கும் வழங்கப்பட்டு தேர்தல்பணி ஆரம்பிக்கப்பட்டது.  மாவட்ட அவைதலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழுஉறுப்பினர் பிரபாகரன், பொதுகுழுஉறுப்பினர்  காளிதாஸ் முருகன், மாவட்டதுணைசெயலாளர் மாரிச்செல்வம், ஒன்றியசெயலாளர்கள் கோவில்பட்டி பெருமாள்சாமி, விளாத்திகுளம் மாரியப்பன், கயத்தார் நடராஜன் கண்ணண்,  புதூர் பேரூர்கழகசெயலாளர் ரவி, கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன் மற்றும்  மாவட்ட அணிநிர்வாகிகள் குவாலிஸ் முத்துமாலை  மகளிரணி […]

கோவில்பட்டி

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 9 பேர் பலியான பரிதாபம்

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி கார்னேசன் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு ராமுத்தேவன் பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  இன்று காலையில் இருந்து வழக்கம் போல் பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன.  74 அறைகளில் பேன்சி ஆக பட்டாசுகள் தயாரிப்பில் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  பிற்பகலில் ஒரு அறையில் பேன்சி ரக பட்டாசுகளுக்கு மருந்து வைக்கும் பணியில் சில தொழிலாளர்களை ஈடுபட்டிருந்தனர். அப்போது […]