தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்தார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய தலைவர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் , கே.எஸ். அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் 5 ஆண்டுகளாக இருந்து வந்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி நீக்கப்பட்டு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கடந்த பல மாதங்களாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நிலையில், இப்போது அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சட்டமன்ற குழு தலைவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகக் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்படுகிறார். இதுநாள் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் செயலாற்றிய கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவித்து தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
